ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு வழக்காடல் துறையில் வேலை வேண்டுமா?

தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 15

பணியிடம்: சென்னை, மதுரை

தகுதி: விண்ணப்பத்தாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30க்கு மிகாமலும், பிசி, எம்எம்சி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
அரசு தலைமை வழக்குரைஞர்,  அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.01.2020

Comments

Popular posts from this blog

பிக்ராக் டொமைன் இலவசமாக ரினிவல் செய்திட

ஆண்ட்ராய்ட் விட்ஜெட் - சில பயனுள்ள தகவல்கள்

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்