Posts

Showing posts from March, 2020

கொரான வைரஸ் அறிகுறிகள் ! இது இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்கவும் !

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் கொரனோ வைரஸ் என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் கிருமி  வேகமாக தொற்றும் இயல்பு கொண்டது.இது  சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும்  கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளிலும் இந்த வைரசின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொரான  வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் இதுவரை ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தன. தற்போது பரவி வரும் வைரஸை சேர்த்தால் இதன்  எண்ணிக்கை ஏழாகிறது. கொரோனா வைரஸ் வகைகளில் இதுவரை ஆறு மட்டுமே அறியப்பட்டிருத்தன.இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது. இந்த சுவாச பிரச்சினை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை தான் இந்த கொரான வைரஸின்  அறிகுறிகள் என்றும் . இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும

தமிழகத்தில் மெல்ல பரவும் கொரோனா ! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள சுகாதார துறை

டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அவர் தமிழகம் வந்தபோது அவருக்கு அறிகுறி இல்லை என்றும் ஆனால், தற்போது அறிகுறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அமைச்சர், தற்போது அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மாதிரி பரிசோதனைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் இன்று 25 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 222 பேருக்கு சோதனை செய்யப்பட்டு... ரயில் மூலம் சென்னை வந்த நபர் கடந்த சில நாட்களில் யாருடனெல்லாம் தொடர்பில் இருந்திருக்கிறார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் அந்த நோயாளியின் விவரங்களை அறிய முயல வேண்டாம் என்றும் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும் தமிழ்நாட்டில் இதுவரை 1,89,750 பயணிகள் தெர்மல் ஸ்கேனர் மூ

தீயாய் பரவும் தல அஜீத் குடும்ப புகைப்படம் ! அப்படி என்னதான் அதுல இருக்கு? புகைப்படம் உள்ளே !! !

Image
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருக்கும் தல அஜீத் எப்பொழுதுமே வித்தியாசமான செயல்களை செய்வதில் வல்லவர். தனக்கென இருந்த ரசிகர் மன்றத்தை களைத்துவிட்டு, அவரவர் பணிகளை செய்ய கட்டளையிட்டவர். மேலும் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் என தனக்குப்பிடித்த விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டி, சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு, சில நேரங்களில் வெற்றிகளையும் பெற்று சாதிப்பவர். தான் நடித்த படத்தின் நாயகயினை காதலித்து திருமணம் செய்தவர். குடும்ப வாழ்வில் தனக்கென ஒரு பிரதான இடத்தை தக்க வைத்துக்கொண்டு ஒரு நல்ல தந்தையாக இருப்பவர். தனக்கு பிறந்த குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு, வாழ்க்கையை இயல்பாக வாழ்பவர். மற்ற ஹீரோக்களைப் போல ரசிகர்களை வருடம் ஒருமுறை சந்திப்பதை வழக்கமாக கொள்ளாமல் இருப்பவர். இருந்தாலும், தான் பயணிக்கும்போது, தன்னைப் பார்க்க காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றாமல், அவர்களைச் சந்தித்து, அவர்களுடன் ஒரு போட்டோ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த வகையில் ரசிகர் ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் போட்டோ எடுத்ததை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரல் ஆக்கியிருந்தார். எந்த நேரத்தில் எவ்வளவு அவசரத்தி

கற்றாழை தரும் நன்மகள் மற்றும் பக்கவிளைவுகள் !

Image
கற்றாழை நன்மை மற்றும் தீமைகள் ! ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளரும் கற்றாழை, ஆப்பிரிக்கா நாட்டினை தாயகமாக கொண்டுள்ளது. இந்தியாவில் கற்றாழை மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் சாகுபடி ஆகிறது. சேலம் மற்றும் தூத்துக்குடியில் கற்றாழை அதிகம் பயிரிடப்படுகிறது. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு, கன்னி, குமரி போன்று பல பெயர்களும் உண்டு. 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் கொண்ட கற்றாழையில், ஏ, ஈ மற்றும் சி வைட்டமின்களும், கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியமும் நிறைந்துள்ள கற்றாழைகளில் பல வகை உண்டு. அதில் சிறந்தது சோற்றுக்கற்றாழை தான்.  7 முறை கழுவியப்பின்னரே கற்றாழை ஜூஸ் தயாரிக்க வேண்டும் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜுஸ்களில் பெரும்பாலானவை ஆரோக்கியமானதில்லை. ஏனெனில், கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால்

மென்பொருள் டவுன்லோட் செய்வது எப்படி?

Image
மென்பொருள் என்பதை ஆங்கிலத்தில் SOFTWARE என்கிறோம். அது கணினியில் தொழிற்படும் கணினி மொழி கட்டளைகளின் தொகுப்பு ஆகும். அதைப் பயன்படுத்தி பல செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். உதாரணம் போட்டோஷாப் என்பது ஒரு மென்பொருள். அதைப் பயன்படுத்தி போட்டோகளை எடிட் செய்து மாற்றி அமைத்திடலாம். புதியதாக படங்களை அதன் வழியாக உருவாக்கலாம். தொழில் ரீதியாக போட்டோகளை டிசைன் செய்து ஆல்பம் உருவாக்கும் வகையில் மாற்றிடலாம். இன்னும் எத்தனையோ உண்டு. இணைய இணைப்பு பெற்று இயங்கும் அனைத்து சாதனங்களிலும் மென்பொருள் தரவிறக்கம் மேற்கொள்ளலாம். அதற்கான இணையத்தளம் சென்று தேவையான மென்பொருளை தரவிறக்கம் செய்திடலாம். உதாரணமாக மைக்ரோசாப்ட் வேர்ட் DOWNLOAD செய்திட வேண்டுமெனில் அந்த இணையதளத்திற்குச்சென்று, அங்கு கொடுக்குப்பட்டிருக்கும் தரவிறக்க இணைப்பினைச் சுட்டுவதன் மூலம் பெற்றிடலாம். மென்பொருள் டவுன்லோட் செய்திட 4 வழிகள் 1. கணினி வழியே மேற்கொள்ளல். 2. மொபைல் போன் வழியே டவுன்லோட் செய்திடல் 3. ஸ்மார்ட்போன் வழியே டவுன்லோட் செய்திடல் 4. லேப்டாப் வழியாக தறவிறக்கம் செய்திடல் 5. டேப்லட் வழியாக பதிவிறக்கம் மேற்கொள்ளல். 1. கணினி வழியே மேற்கொள்ளல்.

அடி வாங்கும் ஆர்யா ! கண்ணீர் விடும் சாயிஷா ! அப்படி என்னதான் நடந்தது? நீங்களே பாருங்க (வீடியோ)

Image
தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதையம்சங்கள் கொண்டதாக இருக்கும். சினிமா படத்திற்க்காக தன் உடல் வருத்தி, உடற்பயிற்சி செய்து தனக்கென ஒரு பாணியை வைத்து நடித்துக் கொண்டிருப்பவர். இவர் நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் சூப்பர் டூப்பர் ஹீட் படங்களில் ஒன்று. நகைச்சுவை படமான இதில் படித்து அரியர் வைத்து, அதை முடிக்காத ஒரு சாதாரண வீட்டின் அம்மாவிற்கு பிள்ளையாக நடித்து இருப்பார். அதில் அவருடைய அண்ணன் "வெட்னரி" டாக்டராக அதிக பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றும் நபராக நடித்திருப்பார். இந்தப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா நடித்திருப்பார். கலகலப்பாக சென்று ரசிகர்களை சிரிக்க வைத்தப்படம் இது. அந்த படத்திற்கு நேரெரிதாக அவர் அகோரியாக ஒரு படத்தில் நடித்திருப்பார். இப்படி வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்யா கில்லாடி. நிற்க.  சமீபத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் "சல்பேட்டா". பிரபல சர்ச்சை இயக்குனர் பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். வட சென்னை குத்து சண