Posts

Showing posts from September, 2019

அம்மாவா, அக்காவா? பாட்டியா? மீண்டும் சினிமாவிற்கு வரும் அசின் !

Image
அம்மாவா, அக்காவா? பாட்டியா? மீண்டும் சினிமாவிற்கு வரும் அசின் !  2000 ம் தொடக்கங்களில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டவர் அசின். மலையாளத்தில் அறிமுகமான அவர், அதன் பிறகு தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தமிழில் முன்னணி நாயகம் "தளபதி" விஜய் உடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் அடித்தது. அதன் மூலம் தமிழில் நன்கு அறிமுகமான நடிகையாக மாறினார். சினி பீல்டில் பிசியாக இருந்தபோது அவர் பற்றிய கிசு கிசுக்களும் பஞ்சமில்லாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென சினிமாவை விட்டு விலகிய அசின் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆரின் என்ற அந்த குழந்தையின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் மீண்டும் அசின் சினிமாவில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. 2000 தொடக்கங்களில் பார்த்த அதே அசின் அப்படியே கட்டழகு குறையாமல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டை சேரன் வெளியேறவில்லை. கடைசி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?

Image
பிக்பாஸ் வீட்டை விட்டு சேரன் வெளியேறி விட்டதாக எல்லோரும் நினைத்துக்க கொண்டிருக்கிறோம். 75 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் மற்றவர்களுக்குச் சவால் விடும் வகையில் நல்ல முறையில் நடந்து கொண்ட ஒரே பங்களிப்பாளர் சேரன் என அனைவருக்கும் தெரியும். அங்குள்ள மற்ற போட்டியாளர்களும் அதை ஒப்புக்கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டிலேயே நியாயமாக நடந்துகொள்ளும் மனிதர் சேரன் என பெயர் எடுத்திருந்த வேளையில் திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு சேரன் வெளியேறிவிட்டார் என தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்படி அது உண்மையில்லையாம். சேரன் தனக்கு "சீக்ரெட்" ரூம் கேட்டதாகவும், தற்பொழுது அந்த ரூமில்தான்  சேரன்  உள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரன் அவ்வளவு சீக்கிரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு போகமாட்டார். அவர் தான் டைட்டில் வின்னராக வருவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீடு விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்பட்ட தகவல் முழுமையான உண்மையில்லை என தெரியவந்துள்ளது. சேரன் இந்த சீசனின் இறுதி வரை இருந்து இந்த டைட்டிலை வின் செய்வார்

கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? (நெகட்டிவ் போஸ்ட்)

Image
மூடநம்பிக்கை | கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? எது உண்மை? தெரிந்துகொள்வோம் வாங்க.... இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்! எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு! வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது என இந்து மதத்தினர் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை. வள்ளுவர் சொன்னார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும்.ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் என்ன பொருள்? எங்களை நாங்கள் நம்பவில்லை, அறிவியலை நாங்கள் நம்பவில்லை, அறிவை நாங்கள் நம்பவில்லை என்றே பொருள். சரி! ஒருவர் ஜாதகம் பார்க்கிறார், அவருக்கு ஜோதிடர் சொன்னது போல நடக்க வில்லை, உடனே அவர் என்ன கருத வேண்டும்? ஜோதிடர் சொன்னது நடக்கவில்லை, அதனால் அது உண்மையல்ல என்ற முடிவுக்குத் தானே அவர் வரவேண்டும்? ஒரு செய்தியைப் பகுத்தறிந்து தெரிந்து கொள்வதில் ச

செம்பருத்தி ஜெனிபருக்கு திடீர் திருமணம். மாப்பிள்ளை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே

Image
தமிழகத்தில் அதிகம் பேரால் பார்ப்பட்டு வரும் தொலைக்காட்சி தொடர் "செம்பருத்தி" இத்தொடரில் வரும் நாயகன், நாயகியின் கெமிஸ்ட் 200% ஒத்துப் போவதால் உண்மையாகவே ஒரு காதல் நடப்பது போன்ற உணர்வை தோற்றுவித்ததுதான் இத்தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. 500 எபிசோட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடரில் நடிப்பவர்களின் ஒவ்வொருவரின் பர்சனல் வாழ்க்கையும் சுவராஷ்யமிக்கதாக இருந்து வருகிறது.  செம்பருத்தி நாயகன் ஆதியை ஒருதலையாக காதலித்து வரும் உமா கேரக்டரில் நடிப்பவர் ஜெனிபர். துறு துறு நடிப்பால்  இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் திடீரென ஜெனிபர் தனக்கு திருமணமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.  கடந்த 25ந் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு மிக எளிமையாக நடைப்பெற்ற இத்திருமணத்தில் மாப்பிள்ளை யார் தெரியுமா?  செம்பருத்தி தொடருக்கு முன்பே பொறியியல் பட்டதாரி சரவணன் என்பவரை ஜெனிபர் காதலித்து வந்தார். இருவீட்டார் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில