Posts

Showing posts from June, 2019

48 நாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது !

Image
நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் போதும் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி எப்போதும் ஏற்படாது. இன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது நரம்புத் தளர்ச்சி மட்டும்தான். எழுதும் போதும் கை நடுங்கும், எதை எடுத்தாலும் ஒரு வகையான தடுமாற்றம் மற்றும் மனசோர்வு, தூக்கமில்லாமல் தவிப்பது போன்றவைகளாகும்.  இது போன்ற பாதிப்புகளில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி அழுவதும், சிரிப்பதும் பைத்தியம் பிடித்தது போன்று காணப்படுவார்கள். அது போன்றவர்கள் எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவு வகைகள் மற்றும் காலை உணவுடன் இனிப்பு சிறிதளவு சேர்த்து உண்டு வரலாம். அல்லது தங்களுக்கு பிடித்த இயற்கையான இடங்களுக்கு சென்று வரலாம். மேலும் சித்த மருத்துவத்தில் இருக்கும் சில உணவு வகைகளை பார்ப்போம்: அமுக்கிராங் கிழங்கு: 500 கிராம் மிளகு: 25 கிராம் சுக்கு: 25 கிராம் அதிமதுரம்: 25 கிராம் ஏலஅரிசி : 25 கிராம் சாதிக்காய்: 25 கிராம் தேன்: 1 லிட்டர் பால்: அரை லிட்டர். செய்முறை: அமுக்கிராங் கிழங்கை நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மண் பானையில் பாலை ஊற்றி, வெள்ளை

எனக்கு அது செட்டாகவில்லை. மேடையில் கதறி அழுத நடிகை . என்ன நடந்தது தெரியுமா? விளக்கம் உள்ளே !

Image
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளிவந்த படம் கனா. அந்த படத்தில் நாயகனாக நடித்த தர்ஷனுடன் ஜோடி சேர இருப்பவர் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி. தும்பா என்ற படத்தை ஹரிஸ்ராம் என்ற இயக்குநர் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காட்டு பகுதியில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை கீர்த்தி பாண்டியன் மேடையில் பேசும்போது, எனக்கு எத்தனையோ கதைகள் சொன்னார்கள். ஆனால் எனக்கு பிடித்த கதை கிடைக்கும்வரை காத்திருந்தேன். சில டைரக்டர்கள் எனது ஒல்லியான தோற்றம் பார்த்து நடிக்க அழைக்காமல் நிராகரித்துள்ளார்கள். எனது கலர், உடல் அமைப்பை பார்த்து ஒதுக்கி தள்ளினார்கள். இப்படி இருக்கும் உன்னை எப்படி நடிக்க வைப்பது என நேரடியாக சிலர் கூறி என்னை மோசமான மனநிலைக்கு உள்ளாக்கினார்கள். அதை எல்லாம் தாங்கிக்கொண்டு என் திறமை மீது நம்பிக்கை வைத்திருந்தேன். என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் தும்பா பட இயக்குனர் ஹரிஷ்ராம் தான் என சொல்லும்போதே கண்ணீர் விட்டு கதறி அழுதார் கீர்த்தி பாண்டியன். சில நிமிடங்கள் பேச முடியாமல் தடுமாறிப்ப

திடீரென்று செம்பருத்தி TRP குறைந்தது. இதுதான் காரணமாம். அதிர்ச்சியில் Zee Tv !

Image
தமிழகம் மட்டுமில்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்று வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது செம்பருத்தி தொலைக்காட்சி தொடர். Zee தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் இத்தொடருக்கு பட்டிதொட்டி எங்கும் பெண்கள் ரசிகர்கள் பட்டாளங்கள் இருக்கின்றனர். சீரியலுக்காக, மற்ற வேலைகளை போட்டுவிட்டு குடும்பத்தோடு டிவி முன்பு உட்கார்ந்து பாரத்து விட்டுதான் மறுவேலை, சாப்பாடு எல்லாமே. இந்நிலையில் திடீரென செம்பருத்தி தொடரின் TRP ரேட்டிங் குறைந்துள்ளது. இதற்கு காரணம் சன் டிவியில் வெளியாகும் நாயகி தொடர்தான். இதற்கு முன்பு செம்பருத்தி தொடர் முதன்மை நிலையில் இருந்த்து.. திடீரென அத்தொடரின் டைரக்டர் மாறியது இதற்கு முக்கிய காரணமாக கூறுகின்றனர். சன் டிவி சீரியலை விஞ்சிய செம்பருத்தி தொடர் தற்பொழுது TRP ரெட்டிங் குறைந்ததை யடுத்து, Zee Tv மீண்டும் முதன்மை நிலைக்கு கொண்டு வர ஏற்பாடுகளை துரிதபடுத்தியுள்ளது. 

ஒரு காதலன் ஒரு காதலிக்கு கொடுத்த பரிசு.. என்னன்னு தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க ! வீடியோ உள்ளே

Image
காதலன் காதலிக்கு பரிசு கொடுப்பது என்பது இப்ப எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிடுச்சி. நினைச்சா கிப்ட் கொடுக்கறாங்க. கிரீட்டிங்ஸ் கார்டு கொடுக்கறாங்க. ஏன் சில பணக்கார காதலனுங்க வண்டி, வீடு, நகை நட்டுன்னு திருமணத்துக்கு முன்பே மனைவி ஆக போறவள்தானே என இஷ்டத்துக்கும் எடுத்து கொடுத்திடறாங்க. சிலர் பார்த்தீங்க வாழ்க்கை முழுசும் மறக்க முடியாத பரிசா குழந்தையை கொடுத்துட்டு ஓடிடறாங்க. சிலர் வேண்டா வெறுப்பா வாழ்க்கை தொடங்கிடறாங்க. இன்னும் சிலரோ, காதல் வேற , கல்யாணம் வேற என்று கட்டுப்பாடு வச்சிக்கிட்டு ஜாலியா ஊர் சுத்துறத மட்டும் லவ்வுன்னு நினைச்சிக்கறாங்க. இப்படி வித விதமான லவ் பன்றவங்க எல்லோரும் மறக்காம காதலிக்கு பரிசு பொருள் வாங்கி கொடுத்திடறாங்க நம்ம கதையில வீடியோவில வர்ற காதலன் ஒரு வித்தியாசமான விலை மதிப்பில்லாத (?) பொருளை கஷ்டப்பட்டு, ஏழு கடல் தாண்டி வாங்கி வந்திருக்கான். அதை பிரிச்சிப் பார்த்து, காதலி கடைசியில் அவனை பார்த்து சிரிச்ச அந்த ஒரு சிரிப்பு இருக்கே... அதுதான் கடைசி சிரிப்பா இருக்கும்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க ஒருமுறை இந்த வீடியோவை பார்த்திருங்க ... இது மாதிரியான பரிசு இதுவரைக்கும் யா

விஜய் பிறந்த நாளுக்கு தெறிக்க விடும் திரையரங்கம்..! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து! விவரம் உள்ளே..!

Image
தமிழ் சினிமாவில் முதன்மை கதாநாயகன் அந்தஸ்தை பெற்றிருப்பவர் நடிகவர் விஜய். தளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவிருப்பதை ஒட்டி, விஜய் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாட கோலாகல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இரத்த தானம், ஏழை எளியவர்களுக்கு உதவுதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது என வழக்கமான பணிகளை மேற்கொள்வதோடு சில வித்தியாசமான நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. அந்த வகையில் பல்வேறு திரையரங்குகள் விஜய் பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்த படத்தை அன்றைய நாளில் திரையிடுகின்றன. அதனையொட்டி நெல்லை ராம் சினிமாஸ்ம் தங்கள் பங்கிற்கு விஜய் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அன்று அட்லீ இயக்கத்தில் வெளியாக பயங்கர ஹிட் அடித்த தெறி படத்தை இலவசமாக ரகிசர்களுக்கு திரையிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, விஜய் பிறந்தநாள் என்றால் ரசிகர்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம்தான்.

முதன் முறையாக பாகுபலி நடிகருக்கு ஜோடியாகும் சாய்பல்லவி - விபரம் உள்ளே !

Image
மாரி 2 வில் நடித்து வெகு ஜன ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்து கொண்டே இருக்கிறது. தமிழ் நடிகையான இவர் ப்ரேமம் என்ற மலையாள படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். பிரமாண்டமாக பேசப்பட்ட இப்படத்தின் வெற்றியின் மூலம் அவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு வெளிவந்த மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலின் மூலம் சிறுவர் சிறுமிகளிடத்திலும் இவர் மிக பிரபலம் அடைந்துள்ளார். வித்தியாசமான நடிப்புத்திறன் மற்றும் சிரிப்பழகால் தமிழ் ரசிகர்களை கட்டி வைத்திருக்கும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் முதன் முறையாக பாகுபலி நடிகரான நடிகர் ராணாவுடன் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். விரட்ட பர்வம் 1992 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஏழை விவசாயி மகளாக சாய்பல்லவி நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அவர் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடையாளமே தெரியாமல் மாறிப்போன கீர்த்தி சுரேஷ் ! என்ன நடந்தது தெரியுமா? படம் உள்ளே..!

Image
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படத்தின் நடிக்கிறார். அதற்காக தன் உடல் எடையையும் கடுமையாக உடற்பயிற்சி செய்து குறைத்துள்ளார். தற்போது அவரது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போன புகைப்படம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட ட்ரெய்ன் ஒன்றில் பயணம் செய்துவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் தனது 20வது படத்திற்காக சென்றுள்ள கீர்த்தி சுரேஷின் ஸ்டைலான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா சினிமா விமர்சனம்

Image
நடிப்பு - ரியோ ராஜ், விக்னேஷ் காந்த், ஷெரின் காஞ்வாலா தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயக்கம் - கார்த்திக் வேணுகோபாலன் இசை - ஷபிர் வெளியான தேதி - 14 ஜுன் 2019 நேரம் - 2 மணி நேரம் 8 நிமிடம் ரேட்டிங் - 2/5 தமிழ் சினிமாவில் காலம் காலமாக பல உதவி இயக்குனர்கள் இயக்குனர்களாக வேண்டும் என தயாரிப்பாளர் கிடைக்காமல், ஹீரோக்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எவ்வளவோ முயன்றும் வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டே விலகி ஊருக்குப் போய் செட்டிலானவர்கள் நிறைய பேர். சில வருடங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட உதவி இயக்குனர்களின் இயக்குனர் வாய்ப்பை குறும் படங்கள் மூலம் நுழைந்து தட்டிப் பறித்தவர்கள் சிலர். ஆனால், குறும் படங்கள் மூலம் இயக்குனர்கள் ஆனவர்களால் அவர்களது இடத்தை நிலையாகத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இப்போது அதே உதவி இயக்குனர்களுக்குக் கிடைக்காத வாய்ப்புகள் யு டியுபில் சாதித்த சிலருக்கு படங்களை இயக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. அப்படி ஒரு வாய்ப்புதான் இந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. யு டியுபில் வீடியோ எடுப்பது வேறு, சினிமா எடுப்பது வேறு என்பது இந்தக் குழுவினருக்கு நன்றாகவ

கேரட்டின் மருத்துவ குணங்கள்(Medicinal Properties of Carrot)

Image
கேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். தங்கத்தை அணிவதால் மேனிக்கு மெருகு கிடைப்பது போல, கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவ குணங்கள் வயிறு கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களை தடுக்கிறது.  தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு. உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்

வீட்டை விட்டு ஓடி வந்து பஸ்ஸ்டாண்டில் படுத்து உறங்கிய இளைஞரை இன்று உலகமே திரும்பி பார்க்கும் அதிசயம் !

முயற்சியை மட்டுமே தனது மூலதனமாக கொண்டு தன் இசை பயணத்தின் வெற்றிக்காக போராடும் அருள்பிரகாசம் என்ற இளைஞரின் வாழ்க்கை பின்னணி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அவரின் குடும்பம் ஒரு விவசாய குடும்பமாகும். தந்தை விவசாயம் செய்து அவரை படிக்க வைத்தாலும் அவரின் கவனம் எல்லாம் இசை மீதே இருந்துள்ளது. அருள்பிரகாசம் தனது இலட்சியத்திற்காக பல மேடைகள் ஏறி தோல்வியை கண்டுள்ளார். எனினும், அவருக்கு கொஞ்சம் கூட இசை மீது கொண்ட ஆர்வம் குறைய வில்லை. இறுதியாக சரிகமபா மேடை அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. குறித்த இளைஞர் அவரின் முதல் வெற்றியை தற்போது சரிகமபா மேடையில் பதிவு செய்துள்ளார். இது குறித்து கண்ணீருடன் உருக்கமாக அவரின் சகோதரி பேசியுள்ளார். பல சோதனைகளை கடந்து இனி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலுவுக்கு தகுதி இல்லை! சினிமாவுக்கு துரோகம் செய்தவர் - கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர்

Image
நகைச்சுவை நடிகர்களில் நடிகர்களில் வடிவேலுவின் பங்கு சினிமாவில் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தவிர்க்க முடியாத ஒரு நடிகராக அவர் இருந்து வருகிறார். ஆனால் அண்மைகாலமாக அவருக்கும் 23 ம் புலிகேசி படக்குழுவுக்கும் அடுத்த பாகத்தை படமாக எடுக்க கருத்து வேறுபாடு இருந்து வந்தன. வடிவேலுவின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில் நேசமணி என அவரின் ஃபிரண்ட்ஸ் பட கேரக்டர் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பெற்று பேசப்பட்டது. இதன் பின் தனியார் சானலுக்கு பேட்டியளித்த அவர் புலிகேசி பட இயக்குனர் சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக சாடி பேசியிருந்தார். மேலும் இயக்குனரை ஒருமையிலும் பேசியிருந்தார். தயாரிப்பாளரை போண்டா டீ திண்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என விமர்சித்தது சர்ச்சையானது. தற்போது அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவா அளித்துள்ள பேட்டியில் வடிவேலு தொழிலுக்கு துரோகம் செய்தவர். தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி தவறாக பேச தகுதி இல்லை. இயக்குனரை ஒருமையில் பேசியது தவறு. இனியொரு முறை சங்கத்தை தவறாக பேசினார் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை எச்சரிக்கையாக சொல்கிறேன். தயாரிப்பாளர் சங

சினேகாவை எட்டி உதைத்த பிரபல நடிகர், பல வருடங்களுக்கு பிறகு அவரே கூறிய ஷாக் தகவல்

Image
சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்தவர். அது மட்டுமின்றி இளம் நடிகர்கள் தனுஷ், சிம்புவுடனும் நடித்து அசத்தினார், தற்போது இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டு தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகின்றார். இவர் புதுப்பேட்டை படத்தில் நடித்த போது, ஒரு காட்சியில் இவரை நடிகர் பாலாசிங் எட்டி உதைப்பது போல் இருந்ததாம். அந்த காட்சி குறித்து பாலாசிங் கூறுகையில் ‘நான் செல்வா படத்தில் அதிக டேக் வாங்கியது அது தான், வயிற்றில் மிதிக்க வேண்டும். அதனால், ஒவ்வொரு முறையும் கவனமாக இருக்க, ஒரு கட்டத்தில் டேக் அதிகமாக, உண்மையாகவே எட்டி மிதித்து விட்டேன், அது எனக்கு மிகவும் தர்மசங்கடமாகியது’ என பாலாசிங் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

வடிவேலு செய்ததை சொன்னால் தமிழ் சினிமாவிற்கே அசிங்கம்: முன்னணி தயாரிப்பாளர்

Image
நடிகர் வடிவேலு சமீபத்தில் நேசமணி என்ற டேக் மூலம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனார். அதன் பிறகு அவர் இயக்குனர் சிம்புதேவன் பற்றி அளித்த பேட்டியும் சர்ச்சையானது. மேலும் இயக்குனர் ஷங்கர் கிராபிக்ஸ் இயக்குனர் என கூறினார் வடிவேலு. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் T.சிவா அளித்துள்ள பேட்டியில் வடிவேலு செய்யும் பிரச்சனைகள் பற்றிபேசியுள்ளார் . தில்லாலங்கடி என்கிற படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேஷியா சென்றது படக்குழு. அங்கு பிளைட்டில் சென்று வந்ததற்காக 8 மணி நேரம் விமானபயண நேரம் ஆனது. அந்த 8 மணி நேரத்திற்கு எனக்கு சம்பளம் வேண்டும் என கூறி பிரச்சனை செய்தார். வடிவேலு திரைப்பயணத்தில் முக்கிய படம் வின்னர். அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளர் தெருவில் நிற்கிறார். அவரை வடிவேலு எங்காவது பார்த்தால் யாரென்றே தெரியாதவர் போல முகத்தை திருப்பிக்கொண்டு சென்றுவிடுவாராம். தன்னை தூக்கிவிட்டவருக்கு வடிவேலு கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான். 24ம் புலிகேசி படத்தில் அவர் செய்த பிரச்சனை பற்றி 16 பக்க புகார் கடிதம் உள்ளது. அதை வெளியிட்டால் வடிவேலுவுக்கு மக்களிடம் உள்ள மரியாதை சுத்தமாக அழிந்துவிடும் என தயாரிப்பாளர் சிவா கூறியுள்ளார்.