Posts

Showing posts from October, 2019

உடல் நல குறிப்புகள் தமிழில்

Image
மனிதர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடம், சூழல் மற்றும் உணவு, உறைவிடம் போன்றவற்றால் தான் பெரும்பாலும் நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக உடல் நலம் பேணுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதால்தான் பற்றாக்குறை அல்லது மிகுதி காரணமாக உடல் நோய்வாய்ப்படுகிறது. உடலை சமநிலைப்படுத்தினால் எந்த சீதோஷ்ண நிலையிலும் எந்த நோயும் நம்மை அணுகாது. தற்பொழுது உள்ள இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் ஒரு மனிதன் முழுமையான சமநிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள நேரமிருப்பதில்லை. அதனால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் உட்பட கேன்சர், எஸ்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் வரை மனிதனை ஆக்கிரமித்து உயிருக்கே உலை வைக்கிறது. என்ன செய்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். சின்ன சின்ன நோய்களுக்கு என்னென்ன மருத்துவங்கள் மற்றும் தடுப்பு முறைகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வோம். சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா-தங்கை குரூப் 2 தேர்வில் தேர்வு !

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கை குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் தெப்பம்பட்டியைச் சேர்ந்த கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற காசாளர் சக்திவேல் அவர்களின் மகள்கள்  திவ்யா 27, சரண்யா 25. இவர்கள் 2019 பிப்ரவரியில் நடந்த குரூப் 2 மெயின் தேர்வில் பங்கேற்று இருந்தனர். தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியிருந்த இவர்களுக்கு தேர்வு முடிவுகள் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில் அக்கா தங்கை இருவரும் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்தது. சரண்யா பி.எஸ்சி., பி.எட்., (கணிதம் பட்டதாரி. 2017 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி, 2018 ல் குரூப் 4 ல் தேர்ச்சி பெற்றார். தற்போது ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக உள்ளார். இந்த ஆண்டு வெளியான குரூப் 3 ல் தேர்ச்சி பெற்று, விருதுநகரில் கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் பணி கிடைத்தது. இப்பணிக்கு செல்ல அவர் விரும்பவில்லை. இந்நிலையில் அவர் குரூப் 2 மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.நேர்முக தேர்வில் நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் போன்ற உயர் பதவிகளை தேர்வு செய்யலாம். இவரது அக

திருமணத்திற்கு மாப்பிள்ளை வேண்டும் - பேஸ்புக்கில் பதிவிட்ட பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் !

Image
பேஸ்புக் என்றாலே காத தூரம் ஓடும் பெண்கள் இருக்கின்றார்கள். காரணம் பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவிட்டால், அதை வைத்து மார்பிங் செய்து விடுவார்கள் என்பதுதான். அப்படி மாற்றி யமைக்கப்பட்ட படங்கள் உலகம் முழுவதும் பகிரப்படுவதால் அவர்களுக்கு பாதுகாப்பு குறைவு, மற்றும் குடும்பங்களுக்கு கவுரவ குறைவு ஏற்படும் என்பதாலேயே பலரும் தங்களது உண்மையான புகைப்படங்களை வெளிவிடுவதில்லை. ஆனால் கேரளாவில் ஒரு பெண் தன்னுடைய புகைப்படத்தைப் பதிவேற்றிவிட்டு, தனக்கு பொருத்தமான மாப்பிள்ளை வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய விபரங்கள் அனைத்தையும் வெளியிட்டு அதற்கு பொருத்தமான மாப்பிள்ளை வேண்டியிருக்கிறார். அத்தோடு விட்டாரா? பேஸ்புக் நிறுவனர் மார்க்குக்கு ஒரு செய்தியையும் பகிர்ந்துள்ளார். தன்னைப் போன்று மாப்பிள்ளை தேடுவோருக்கு உதவிகரமாக FB Matrimonial ஒன்றினையும் தொடங்கிட வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் பதிவின் சாராம்சம் இதுதான். தான் fashion desinging முடித்திருப்பதாகவும், தனக்கு 28 வயது நிரம்பி விட்டதாகவும் பதிவேற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய குடும்ப நபர்களைப்பற்றிய விபரங்களையும

மார்பகங்களை பெரிதாக்க உதவும் உணவுகள் !

Image
மார்பகங்களை எடுப்பாக, பெரிதாக காட்டிட உதவும் உணவுகள்  தமிழக பெண்களுக்கு அழகு என்றாலே ஒவ்வொரு அவயமும் அழகுதான். கண், காது, மூக்கு எனத் தொடங்கி, அந்தரங்க அவயங்கள் வரை அனைத்திற்கும் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க முயற்சிகளை மேற்கொள்வர். சிலருக்கு தேகம் கருமையாக இருக்கிறதே என கவலை கொண்டு, மஞ்சள் பூசி குளித்து தேகத்தை பளபளபாக்குவர். சிலருக்கோ கண்கள் அழகாக இல்லையென கண் மை பூசி அழக்காக காட்சித் தர முயற்சிப்பர். இப்படி ஒவ்வொரு விடயத்திலும் அதிக சிரத்தை எடுத்து தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் உலகப் பெண்களில் தமிழக பெண்கள் வித்தியாசமான ஒப்பனை அலங்கரங்களை , பாரம்பரிய முறையில் செய்து தூள் கிளப்புவர். இத்தனை செய்தும் ஒரு சிலருக்கு சில கவலைகள் ஏற்படுவதுண்டு. அதாவது அவர்களது உடலுக்கேற்ற அவங்க அவயங்கள் பொருத்தமாக இல்லாமல் இருப்பதாக கருதவர். அந்த வகையில் ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிக கவர்ச்சியாக இல்லாமல், ஆண்களின் மார்பகத்தைப் போன்று தட்டையாக இருக்கும். அதுபோன்ற பெண்கள் மார்பக அழகை கூட்ட, பெரிதுப்படுத்திக்காட்ட சில முயற்சிகளை மேற்கொள்வர். அவ்வாறான பெண்களுக்கு மார்பகங்களை எடுப்பாகவு

பிகில் டீசர் ரெடி ! இயக்குனர் அட்லி

Image
சர்க்கார் படத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் "பிகில்". ஏக எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் "வேற லெவல்" படமாக இருக்கும் என அந்தப் படத்தின் இயக்குனர் அட்லி தெரிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல் "பிகில் ஆடியோ" வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் என் படங்களை கிழியுங்கள், என் பேனரை எப்படி வேண்டுமானாலும் கிழித்துவிட்டுப் போங்கள். ஆனால் என் ரசிகன் மீது கை வைக்காதீர்கள் என பேச ரசிகர்களை ஏக மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். இயக்குனர் அட்லி பேசும்பொழுது, தன்னை சமூக வலைத்தளங்களில் "மீம்ஸ்" போட்டி கீழ்தரமாக உருவேற்றப்பட்டதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், "கருப்பு" என்பது ஒரு நிறம்தான். அறிவல்ல என்று த த்துவார்த்தமாக பேசி தன்னுடைய கருத்தை தெரிவித்தார். கருப்பு என்பது தோலின் நிறம் மட்டுமே.. என்னுடைய திறமையை திரையில் பாருங்கள் என்பது போல இருந்தது அவருடைய பேச்சு. எத்தனை அட்டை கருப்பாக இருந்தாலும், திறமை, தன்னம்பிக்கை இருந்தால் என் மனைவி போல வெள்ளையாக இருக்கும் வெற்றி தானாகவே வந்து விடும் என்பது போல அவருடைய நடத்தை