Posts

Showing posts from December, 2019

காளிதாஸ் சினிமா விமர்சனம்

Image
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத், இந்த படத்தில் வேற லெவலில் நடித்திருக்கிறார்கள். கடைசி வரை படத்தின் கிளைமேக்ஸ்/முடிவை கண்டு பிடிக்க முடியாதபடி த்ரில்லர் மூவியாக கொடுத்திருப்பது சிறப்பு. காளிதாஸ் மூவி ரிவ்யூ  நடிப்பு - பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் தயாரிப்பு - லீப்பிங் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட், இன்க்ரடிபிள் புரொடக்ஷன்ஸ், தினா ஸ்டுடியோஸ் இயக்கம் - ஸ்ரீ செந்தில் இசை - விஷால் சந்திரசேகர் வெளியான தேதி - 13 டிசம்பர் 2019 நேரம் - 2 மணி நேரம் 6 நிமிடம் ரேட்டிங் - 3.5/5 தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் அதிகப் படங்கள் வெளியீடாக இந்த வாரம் அமைந்துள்ளது. 9 நேரடி தமிழ்ப் படங்கள் வரை இன்று வெளியாகின்றன. இப்படி அதிகமான படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போது அவற்றில் எதைப் பார்ப்பது என்ற குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தையெல்லாம் மீறி இந்தப் படத்தைப் பார்க்கலாம் என நம்பிக்கை கொடுக்கும் படமாக காளிதாஸ் படம் அமைந்துள்ளது. அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில் தன் முதல் படத்தையே ஆச்சரியப்படும் விதத்தில் கொடுத்திருக்கிறார். த்ரில்லர் படங்கள் என்று சொல்லிக் கொண்டு பல படங்கள் வெளிவரும். ஆனால், அவற்றின் சஸ்ப

இருட்டு - பட விமர்சனம்

Image
நடிகர்/இயக்குனர் சுந்தர் சி நடித்துள்ள படங்களில் இது ஒரு வித்தியாசமான படம். கம்பீர முறுக்கு மீசையுடன் போலீஸ் அதிகாரியாக வரும் சுந்தர் சியின் பார்வை அபாரம். இருட்டு - தமிழ் திரைப்பட விமர்சனம் நடிகர்கள்: சுந்தர்.சி, சாக்ஷி சவுத்ரி, தன்ஷிகா, விமலாராமன், யோகி பாபு மற்றும் பலர் தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட் இயக்கம் : வி.இசட்.துரை இசை : கிரிஷ் வெளியான நாள் : 6 டிசம்பர் 2019 நேரம் : 2 மணிநேரம் 12 நிமிடம் ரேட்டிங் : 2.5/5 இருளும், தனிமையும் உங்களை பயமுறுத்துமானால், இந்த இருட்டு நிச்சயம் மிரட்டும்! இஸ்லாமிய மக்களும், அவர்களின் நம்பிக்கைகளும் எனச்சொல்லி பின்னப்பட்டிருக்கும் கதை. ஒலிக்கும் மந்திரங்களும், தனித்துவமான இசையும் காட்சிக்கு காட்சி அச்சம் விதைக்கின்றன. முன்னொரு காலத்தில் துாக்கிலிடப்பட்டவர்களின் ஆன்மாக்களால் சிஹாபுரா ஹள்ளி மக்களுக்கு பேராபத்து வர, காவல் அதிகாரியாக காப்பாற்ற வருகிறார் சுந்தர் சி. வருபவர் நிச்சயம் தெய்வீக பிறவியாகத் தான் இருக்க வேண்டும்; அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் உடலில் ஒரு மச்சமும் இருக்க வேண்டும் எனும் மரபுப்படி அவரும் அப்படியே இருக்க,

மம்மி ஷூக்குள்ள சத்தம் வருது.. ! பயந்து ஓடிய சிறுமிக்கு என்ன நடந்தது தெரியுமா?

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த சிறுமி ரக்ஷனா. பள்ளி செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தாள். காலையில் குளித்து முடித்து, சாப்பிட்டு, உடைமாற்றிக்கொண்டு பள்ளி பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் உள்ள ஷூவை அணிந்துகொள்ள முற்பட்டாள். அப்பொழுது ஷூவிலிருந்து சத்தம் வரவே பயந்துபோன சிறுமி அம்மா ஷூக்குள்ளிருந்து ஏதோ சத்தம் வருது என்று பயந்து போய் உள்ளே ஓடினாள். சமையலறையில் இருந்த ரஷனாவின் அம்மா என்ன ஏதென்று பார்க்க, அதிர்ச்சியில் உறைந்தே போனார். ஷூவுக்குள் பாம்பு ஒன்று ஒளிந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சம யோசிதமாக அருகில் இருந்த கணமான கூடை என்றை எடுத்து அந்த ஷீவை மூடிவிட்டு, பயர்சர்வீஸ் ஆபிசிற்கு அவசரமான போன் செய்து விஷயத்தை சொன்னார். உடனடியாக அங்கு வந்து பாவனி பயர்சரவீஸ்  வீர ர் அந்த கூடியை நகர்த்திவிட்டு உள்ளிருந்த பாம்பை இலாவகமாக எடுத்தனர். அப்போது பயங்கர ஆக்ரோசமாக அந்த பாம்பு சீறியது. அப்போதுதான் தெரிந்தது அது கடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்பு என்பது. சுமார் 2 அரை அடி நீளம் கொண்ட அந்த பாம்பை பிடித்து,பத்திரமாக அருகில் உள்ள வனக்காட்டில் விட்டனர். 5ம் வகுப்பு படிக்கும் ரக்ஷனா ஷூவை அணிவதற்க

ஆடை படத்தில் அப்படி நடித்ததில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ! அமலாபால் அதிரடி பேட்டி !

Image
இன்று தமிழ் சினிமா மட்டுமல்ல.. உலகமெங்கும் உள்ள சினிமாக்களில் கிளாமர் ரோல் செய்வதற்கு என தனியாக எந்த நடிகையும் இல்லை. ஹீரோயினாக நடிப்பவர்களே அதையும் செய்து விட்டுப் போகிறார்கள். பணத்திற்கு பணமும் ஆச்சு. நடிப்புக்கு நடிப்பும் ஆச்சு என அவர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு வைப்பதை குறைப்பதற்காகவே நல்ல அழகான கதாநாயகிகளை தேர்ந்தெடுத்து, அவர்களை கவர்ச்சி ஆட்டம் ஆட வைத்து விடுகிறார்கள். நடிகைகளும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என முடிவெடுத்து, இயக்குனர்கள் சொல்வதை கேட்டு நல்ல பிள்ளையாக நடித்து பெயர் வாங்கிக்கொள்கிறார்கள். அப்படி கிளாமர் ரோலில் நடித்துவரும் நடிகைகளுக்கு மத்தியில் அமலாபால் வித்தியாசமானவர். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக ஆடையின்றி நடித்து பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். ஆடையின்றி இருக்கும் அந்த ஒரு போஸ்டரே அந்த படத்திற்கு படு பயங்கரமான விளம்பரமாக அமைந்தது. படம் வெளிவந்த பிறகு, ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்தனர். முதன் முதலாக ஒரு தமிழ் நடிகை நிர்வாணமாக நடிப்பதை பார்க்கச் சென்றனர். ஆனால் அது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்

சூரியக் காற்று குறித்து பல அதிர்வு தகவல்களை வெளியிட்டுள்ள விண்கலம் !

Image
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 93 மில்லியன் மைல். பூமியிலிருந்து முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய 'பார்கர் சோலார் புரோப்' என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து  கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்டது. சூரியன் குறித்த தகவல்களை  சேகரிக்க பார்கர் விண்கலம் சூரியனுக்கு அருகே சென்றுள்ளது. அது 15 மில்லியன் மைல் (24 மில்லியன் கி.மீ) தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் இறுதியில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் (6 மில்லியன் கி.மீ) தூரத்தில் பயணிக்கும், இது முந்தைய எந்த விண்கலத்தையும் விட ஏழு மடங்கு நெருக்கமாக இருக்கும். சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனா வை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் இன்னும் 6  ஆண்டுகள் சூரியனுக்கு நெருக்கமாக பறந்து  24  மணி நேரமும்  சூரியனை கண்காணிக்கும். இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நெருக்கமாக  சூரியனை படம் பிடித்து சோலார் புரோப்  அனுப்பி உள்ளது. இதற்கு முன்னர் எடுக்க