Posts

Showing posts from January, 2020

ரஜினியை வச்சி செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா? MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது?

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதிமுக, திமுக தலைவர்கள் இறந்த பிறகு, தம்மிழக அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்த ஒரு பவர்புல்லான தலைவர் உருவாகும் வரை இந்த எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டிருக்கிறது. அசைக்க முடியாத எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்ததும், அதன் பிறகு அவர் உடல்நிலை கோளாறால் அவதி பட்டு, கடந்த தேர்தல்களில் அவருடைய கட்சி படுதோல்வி அடைந்ததும் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் படி செய்துவிட்ட இந்த வேளையில், அடுத்த ரஜினிகாந்த் மட்டுமே தமிழக அரசியலில் ஒரு பெரிய இடத்திற்கு வர முடியும் என்ற உருவாகிக் கொண்டிருக்கிறது. நிலையற்ற செயல்பாடுகளால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் ரஜினிகாந்தின் செயல்பாடுகள் சில நேரங்களில் அவநம்பிக்கை தருவதாகவே உள்ளது. இதோ அரசியலுக்கு வருகிறேன் என்று கடந்த 20 ஆண்டுகளாக கூறி வந்தவர் மெல்ல மெல்ல அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதிலும், கடந்த இரு ஆண்டுகளில் பெரியதாக ஏதும் மாற்றங்களைச் செய்யவில்லை. இருப்பினும் மீடியா விடுவதாக இல்லை. அவ்வப

பிரபல நடிகையின் தந்தை அதிர்ச்சி மரணம்! குலுங்கி அழுத நடிகை! எதனால் இறந்தார் தெரியுமா? அதிர்ச்சி தகவல் உள்ளே !

Image
பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமலாபால். மைனா படத்தின் தமிழுக்கு அறிமுகமானதிலிருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இதற்கிடையில் டைரக்டர் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆறு மாதங்கள் கூட நீடிக்காத அந்த காதல் கல்யாணம், ஒரு வருடத்திற்குள் மண முறிவு வரை சென்றது. தொடர்ந்து படத்தில் வாய்ப்புகள் வருவதால் திருமணம் அதற்கு ஒரு தடையாக இருக்க கூடாது என நினைத்து அவர் விவாகரத்துப் பெற்றார். தற்பொழுது மும்பையில் தனியாக வசித்து வரும் அமலாபால் தொடர்ந்து தனுஷ் படங்களில் இரண்டு படங்கள் நடித்து பரபரப்பை ஏறபடுத்தினார். பிரபல நடிகர் ஒருவருக்கும் அவருக்கும் இடையே காதல் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசு கிசுக்கப் பட்ட நிலையில், அது வெறும் கிசு கிசுதான். உண்மையில்லை என்பதை அவர்கள் இருவரும் வெளிப்படையாக தெரிவித்து பேட்டியளித்திருந்தார்கள். அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் கமிட் ஆன அமலாபால் "ஆடை" படத்தில் நடித்து, இந்திய உலகையே திரும்பி பார்க்க வைத்தார். படத்திற்கு ஏற்றவாறு, ஒரு காட்சியில் ஆடையில்லாமல் நடித்து பெரும் எதிர

நடிகர் ரஜினிகாந்த் காயம் ! ரசிகர்கள் கவலை ! Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் !

Image
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது புதிய படமொன்றில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் நிலையில்,  இன்று ரஜினிகாந்த்  பியர் க்ரில்ஸ் உடன் பிரபல நிகழ்ச்சியாக 'மேன் vs வைல்டு' என்ற ஷோவில் பங்கேற்றிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ரஜிகாந்திற்கு சிறிய அளவு காயம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அந்த மேன்-வைல்டு ஷோ ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. முன்னதாக இந்த ஷூட்டிங்க கர்நாடாகவின் பந்திப்பூர் காப்பகத்தில் நடைப்பெற்றது. இதன்போது ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட காயம் மிக பெரியதாக இல்லை என்றும், அவர் இப்பொழுது நலமாக இருக்கிறார் என்று ஷூட்டிங் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ANI தனது ட்விட்டர் பக்கத்தில் "படபிடிப்பின்போது ரஜினி காந்திற்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் ட்விட் செய்துள்ளனர். மேலும் அந்த விலங்குகள் காப்பாகத்தில் நாளை ஷூட்டிங் நடத்த அனுமதி இல்லை என்றும், 28 மற்றும் 30ம் தேதி ஆறு மணி நேரம் ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும

பொது வெளியில் பிரபல நடிகையின் தங்கை செய்த அதிர்ச்சி செயல் ! ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியீடு !

Image
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமாகி, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை திவ்யா. இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து இரண்டு படங்கள் நடித்து, சினிமா உலகில் தன்னுடைய பெயரையும் பதித்துக் கொண்டவர். தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யாவிற்கு ஸ்ரீரம்யா என்ற தங்கை உண்டு. இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் ஓரீரு படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தமிழில் யமுனா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கும் வாய்ப்கள் இல்லாத நிலையில், தற்பொழுது பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பிரபல நடன இயக்குனருடன் அவர் ஜோடி சேர்ந்து கட்டியணைத்து நடனமாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அவர்கள் டான்ஸ் ஆடியதை பார்த்த ஆடியன்ஸ் ஒருவரே இவ்வாறான வீடியோவை பதிவாக்கி வெளியிடுள்ளார். வீடியோ இதோ. #sriramya pic.twitter.com/LIpDr6MtTX — Siranjeevi sri (@imjeevi777) January 27, 2020

சார்சை விட கொரனோ வைரஸ் கொடியதா? என்ன சொல்கிறது ரிப்போர்ட்?

Image
அவ்வப்போது சீசனில் மனிதர்களை பாதிக்கும் புதிய வைரஸ் உருவாவதும், அதனால் பீதி அடைந்து மக்கள் அச்சம் கொள்வதும் தொடர்ந்து கொண்டுள்ளது. சீனாஇன் வுஹானில் கடல் உணவு சந்தையிலிருந்து உருவாகியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் (nCoV) உலகம் முழுவதும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. சீனாவில் மட்டும் அதிகமான அளவில் பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பராமல் இருக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரைக்கும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்சைவிட பரவல் விகிதம் கொரோனோ வைரஸ் ற்கு உள்ளதால் மேலும் அச்சப்பட வேண்டியதுள்ளது. சார்ஸ் வைரஸ் severe acute respiratory syndrome 2002 - 2003 ஹாங்காங்கில் உருவாகி பிறகு மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இதனால் 8500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 1000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது அதி தீவிரமடைந்து வரும் கொரோனோ வைரஸ் க்கு புதிய தடுப்பு மருந்து ஏதும் இல்லை. ஆன்ட் பயோடிக் மருந்துகள் பாக்டீரீக்களை கட்டுப்ப

பாகனிடம் அன்பை வெளிப்படுத்த தடுப்பு வேலியை தாண்டும் குட்டி யானை ! பார்ப்பவர் மனதை கவர்ந்த காணொளி இதோ !

Image
செல்லப் பிராணிகள் சில நேரம் அன்பை வெளிப்படுத்த எது வேண்டுமானாலும் செய்யும். குறிப்பிட்ட இடைவெளியில் அதை சந்திக்காமல் இருந்துவிட்டு, திடீரென முன்னே போய் நின்றால் அது அடையும் குதூகலத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். தன் அன்பை வெளிப்படுத்த சுற்றி வந்து முட்டி மோதி தள்ளி மேலே விழுந்து புரளும். நாய் போன்ற நன்றியுள்ள பிராணி என்றால் நாக்கால் நக்கி , வாலாட்டி , அது ஒரு தனி பாசையில் பேசும். அந்த வகையில் தாய்லாந்தின் யானைகள் சரணாலயம் ஒன்றில் வசிக்கும் 20 வயது குட்டி யானை ஒன்று, தன்னுடைய பாகனை அன்பால் ஆர தழுவ முயற்சிக்கும் காட்சி ஒன்றினை ட்விட்டர் பக்கத்தில் ஜார்கண்ட் மாநில ராஜ்ய சபா எம்பி நாத்வானி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில்தான் மேற்குறிப்பிட்ட பாசப்போராட்டம் பதிவாக்கப்பட்டுள்ளது. அதில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் யானைப் பாகனை தன்னுடைய துதிக்கையை தோள்பட்டையில் ஒரு தோழனை ப்போன்று போட்டு அந்த குட்டியானை பகிரும் அன்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அவர் யானை குட்டியின் அன்பை ஏற்றவாறு பெயிண்ட் செய்ய, மீண்டும் அது தன்னுடன் அரவணைத்துக்கொள்ள, அங்கிருக்கும் தடுப்பு வேலியின் மீது, ஒர

வெளிநாட்டில் நடந்த நடிகர் ஜீவா மேட்டர் இதுதான் ! அந்த ஓட்டலில் அவர் அப்படி என்ன தான் செய்தார்? விபரம் உள்ளே !

Image
வெளிநாட்டில் நடிகர் ஜீவா ஹோட்டலில் கைது செய்யப்படார் என்ற செய்தி, நேற்றைய வரை பர பரப்பாக பேசப்பட்டு வந்தது. அவர் அந்த நாட்டு சட்டத்திற்கு  எதிராக அப்படி என்னதான் செய்தார்? எதனால் அவர் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்டார் . ஸ்காட்லாந்தில் நடந்தது என்ன? ஜீவாவே அதை விவரிக்கிறார். 83 திரைப்படம்; பாலிவுட் திரைப்பட நடிகர் ரன்வீர் சிங் நடித்து வெளியாக உள்ள படம் 83 திரைப்படம். அவர் நடித்துள்ள அத்திரைப்படத்தில் "பர்ஸ்ட்லுக்" போஸ்டர் நேற்று முந்தைய தினம் வெளியிப்பட்டது. அந்த படத்தில் நம் ஜீவா ஸ்ரீகாந்த் ஆக நடித்துள்ளார். பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியிட்ட விழாவில், ஸ்காட்லாந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக தெரிவித்தார். அவர் அதைப்பற்றி கூறியதாவது. டைரக்டர் விஷ்ணு மூலம் எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அணுகிய போது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த பாத்திரத்தில் நடிக்க நான் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். பிறகு ஸ்காட்லாந்தில் முதல் கட்டப்படபடிப்பு தொடங்கியபோது நான் அந்த சம்பவத்தால் இப்படி நடக்க

வெறும் வயிற்றில் தப்பி தவறி கூட இதை சாப்பிடாதீங்க ! அப்புறம் ஆபத்தில் சிக்கி தவிக்காதீங்க !

Image
காலையில் தூக்கத்தை விட்டு எழுந்தவுடன், தினமும் நான் காபி அல்லது டீ பருகுவோம். அவ்வாறு தினமும் பருகவது உடலுக்கு நல்லதல்ல என்று உணவியல் நிபுணர்கள் கருத்தது தெரிவித்துள்ளனர். காலையில் எழுந்தவுடன் நீராக்கங்கள் சாப்பிடுவது நல்லதாம். குறிப்பாக வெதுவதுப்பான நீரை 2 டம்ளர் அருந்துவது குடல் சுத்தமாக உதவுகிறதாம். அதனுடன் தேன் கலந்து குடித்தால் அதைவிட பல மடங்கு பயன் அதிகம் என்கின்றனர். தோல் பளபளப்பு கூடி, இளமை தோற்றம் கிடைக்கும் என்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, உடல் முன் எப்போதும் இல்லாத்து போல புத்துணர்ச்சியுடன் காணப்படும். வெந்நீரில் தேன் கலந்து பருகுவதால் சளி, இருமல் போன்ற தொல்லைகள் வெகு விரைவில் தீர்ந்து, நுரையீரல் கழிவுகள் வெளியேறி சுவாசம் சீராகிறது. இதனால் ஆக்சிஜன் உட்கொள்ளும் அளவு அதிகரித்து, இரத்தம் சுத்தப்படுகிறது. இதனால் உடல் நல்ல சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது. மேலும் தூக்கமின்மை நீங்கி, நல்ல தூக்கம் கிடைக்கிறது. இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்து தேவையான சக்தியை உருவாக்கி அதி அற்புத உணர்வை நமக்களிக்கிறது. உடல் குளிர்சியை ஏற்படுத்தி, இரத்த சர்க்கையை கட்டுக்குள் வைத்து, வாய

குஷ்புவின் மகளா இது? எவ்வளவு ஸ்லிம் ஆகிட்டார்.. ஆச்சர்யத்தில் வாய் பிளந்த ரசிகர்கள் !

Image
இந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. 90 களில் தென்னிந்திய ரசிகர்களின் கணவுக் கன்னியாக இருந்தவர். இவர் டைரக்டர் சுந்தர் சி யை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனந்திகா, அவந்திகா என இரண்டு பெண்கள் உள்ளனர். செலிபிரிட்டியாக இருக்கும் இவர்களின் வாரிசுகள் மட்டும் வஞ்சகமில்லாமல் வளர்ந்து நின்றனர். வருஷம் 16 படத்தில் சினிமா உலகில் கால் பதித்த குஷ்பூவிற்கு தொட்டதெல்லாம் துலங்கியது. அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பிரபல கதாநாயகியாக வலம் வந்த அவர் தற்பொழுது பிரபல தொலைக்காட்சி ஒன்றின் தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்கள் தன் பக்கம் கவர்ந்து வைத்துள்ளார். இந்நிலையில் குஷ்புவின் இளையமகள், திடீரென உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். ரசிகர்கள் குண்டு பாப்பா என கிண்டலடித்து வந்த நிலையில், நேற்று தன் பிறந்த நாளில் ட்விட்டர் ஒரு ஸ்லிம் போட்டை போட்டு அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளார். thank you for the birthday love ♡ my heart is full . pic.twitter.com/WD3cSwM3kx — ani sundar (@AnanditaSundar) January 25, 2020 படத்தைப் பார்த்த ரசிகர்கள் குஷ்புவின் இளைய மகள் அ

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துவிட்டதா? மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் இனி யாரும் உங்களுடைய பணத்தை திருட முடியாது !

Image
இன்று பணம் எடுக்க கால்கடுக்க பேங்கில் நிற்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. ATM மெஷின் வந்ததிலிருந்து நினைத்த நேரத்தில் பணத்தை எடுத்து பயன்படுத்தி வந்தனர். அதைவிட ஒரு படி மேலே போய் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பணத்தை எடுக்காமலேயே பண பரிவர்த்தனை செய்திடும் வசதியும் வந்துவிட்டது. இதனால் ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமெனில் உடனடியாக நெட் பேங்கிங் அல்லது மொபைல் போன் மூலம் UPI வசதி மூலம் பண பரிவர்த்தனை ஒரு சில வினாடிகளில் நடத்த முடிகிறது. இந்த செயல்பாடுகள் அனைத்துமே இணையம் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. இங்குதான் நமக்கு சங்கு வைக்க ஒரு சில யுக்திகள், ஓட்டைகளை இணைய திருடர்கள் பயன்படுத்தி வந்தனர். அவர்களிடமிருந்து பணத்தை காப்பாற்ற மத்திய அரசு ஒரு புதிய வழியை (திட்டத்தை ) கையில் எடுத்து பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. அது cyber swachhta kedra பாதுகாப்புத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் இன்டர்நெட் வழங்கும் நிறுவனங்களுடன் உங்கள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை இந்த நிறுவனம் தீங்கு ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும். உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக உங்கள் இன்டர்நெட

2020 சனிப்பெயர்ச்சி ஆரம்பம்? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது? யாரையெல்லாம் வச்சி செய்யப் போகுது?

Image
அனைவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் "சனிப்பெயர்ச்சி" இன்று நடைபெறப்போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி, எந்தெந்த ராசிக்கு என்னென்ன சாதகங்கள் என்னென்ன பாதங்கள் நிகழப்போகிறது என்பதை தெரிந்துகொள்வோம். மகரம்: இந்த ராசி சனி பகவானின் சொந்த வீடு என்பதால் எந்த ஒரு ராசிகார ர்களுக்கும் எந்த ஒரு பெரிய பிரச்னையும் ஏற்படபோவதில்லை. இந்த சனிபெயர்ச்சி காரணமாக கும்ப ராசிகார ர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.  நவ கிரகங்களில் சனி பகவான் நீதிமான் என்பதால் நேர்மையாக நடந்து கொள்பவர்களுக்கு சனிபகவான் எந்த தொரு தொல்லையும் தர மாட்டார். தவறு செய்பவர்கள் சும்மா "வச்சு செய்வார்". அவர் கொடுக்கும் தண்டைகளின் மிகப்பெரிய அனுபவ பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவ்வளவு எளிதில் மரண பயத்தை யாருக்கும் கொடுக்க மாட்டார். கிரக நிலைகளின் எந்தெந்த ராசி கார ர்களுக்கு இந்த "சனிப் பெயர்ச்சி" என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை இங்கு முழுமையாக தெரிந்துகொள்வோம்.

ட்விட்டரில் மோதிக்கொள்ளும் தமிழ் - தெலுங்கு சினிமா ரசிகர்கள் | காரணம் இதுதான் !

Image
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மினி பாலிவுட் என்று தமிழ், தெலுங்கு திரை உலகை சொல்லலாம். இங்குதான் அதிக படங்கள் தயாரிக்கின்றனர். அப்படிப்பட்ட சினிமா துறையில் இப்போது ட்வெட்டரில் பெரும் பிரளயமே நடந்து கொண்டுள்ளது. தமிழ் - தெலுங்கு சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் அடித்துக்கொள்வதுதான் அது. ட்விட்டரில் ஒரு தெலுங்கு ரசிகர் தமிழ் விஜய் நடித்த குஷி படத்தையும், தெலுங்கு பவன் கல்யாண் நடித்த குஷி படத்தையும் கம்பேர் செய்து ஒரு மீம் ஒன்றை பதிவேற்றினார். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடுங்கோபமடைந்து ஒரு மீம் தயார் செய்து அதை ட்விட்டரில் டெரெண்ட் ஆக்கினர். அது பெரிய பிரச்னையாக உருவெடுத்து, இப்பொழுது தமிழ் & தெலுங்கு ரசிகர்கள் பிரச்னையாக ட்விட்டரில் உருவெடுத்திருக்கிறது.  இதனையடுத்து நேற்று வெளியானா தெலுங்கு ரீமேக் அசுரன் (நாரப்பா) படத்தையும் ரசிகர்கள் ட்விட்டரில்  ட்ரோல் செய்து வருகின்றனர். Expectation vs Gutka Reality https://t.co/17FJRbobkG pic.twitter.com/Kn0DlY9hRY — MaD MaX🏌️ (@Aayan_Areef) January 21, 2020 Ore field out aayina dummy fans 😂 #PspK kukka notlo yemana paanparaak

பட்டாஸ் - தமிழ் திரை விமர்சனம்

Image
கொடி படத்திற்கு பிறகு  இயக்குனர் செந்தில்குமார் இயக்கியிருக்கும் படம் பட்டாஸ். எதிர்நீச்சல், கொடி, காக்கிச்சட்டை என இதற்கு முன்பு சில படங்களை இயக்கியிருக்கும் தனுசை வைத்து இயக்கிய இரண்டாவது படம் இது. கதை என்ன? ஒரே வரியில் சொல்வதானால் தந்தையை கொன்று விட்டு ஜாலியாக இருக்கும் வில்லனை திரும்ப மகன் வந்து பலி வாங்கும் கதை. அவ்வளவுதான். ஒன்லைன் கேட்டவுடனே போர் அடிக்குமே. ஆமாம். அதேதான். திருடனாக வாழ்ந்து வரும் பட்டாஸ், அதே பகுதியில் வாழ்ந்து வரும் கதாநாயகியை காதலித்து வருகிறார். அவ்வப்பொழுது சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுவதுதான் இவர் வலை. அப்படி ஒரு பெண்ணிடம் பணத்தை பறிக்க முயலும்போது, அவர்தான் தன்னுடைய தாய் என்று தனுஷிற்கு தெரியவருகிறது. தாயாக சினேகா நடித்து இருக்கிறார். அப்போது சென்னையில் பெரிய குத்து சண்டை போட்டி நடத்த திட்டமிடுகிறார் சென்னையில் ஒரு பெரிய புள்ளி. அதை ஏற்பாடு செய்தவர்கள் தன் தந்தையை கொன்று, தாயை சிறைக்கு அனுப்பியவன் என தெரிவருகிறது நாயகனுக்கு. நாயகன் சும்மா இருப்பாரா? வழக்கமான பழி வாங்கல் கதைதான். திரைப்படத்தின் முதல்பாதியில் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் தனுஷ் ரசிக்

விஜய் சேதுபதியால் குடும்பத்துடன் சேர்ந்த திருநங்கை ! நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன தருணம் இதோ !

Image
சிறு வயதிலேயே வீட்டை விட்டு துரத்தப்பட்ட திருநங்கை ஸ்நேகா. ஜீவா என்ற பெயர் கொண்ட இவர் தர்மதுரை விஜய் சேதுபதி படத்தில் நடித்திருந்தார். இவருக்கு எப்படி சினிமா வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி கேட்ட கேள்விக்கு மீடியா முன் தன்னுடைய கண்ணீர் கதையை சொன்னார். என்ன்னுடைய சொந்த ஊர் சிவகாசி. நான் திரு நங்கை என்று தெரிந்ததும் என்னை ஒதுக்கினர். ஒரு கட்டத்தில் வெறுத்து அடித்து துவைத்தனர்.  அவர்களது கொடுமையை தாங்காமல் 13-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன். கோயம்பேடு வந்து ஒரு  டீ கடையில் வேலை செய்தேன். அப்பொழுதுதான் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு நிறைய சினிமா கம்பெனிகளில் வாய்ப்புகள் கேட்டு சென்று வந்தேன். சில சினிமா கம்பெனிகளில் என்னை உள்ளே நுழைய கூட அனுமதிக்கவில்லை. சில கம்பெனிகளில் போட்டோ கேட்பார்கள்.  சினிமாவிற்கு எப்படி போட்டோ  எடுத்து கொடுப்பது என்பது கூட அப்போது இருந்தேன்.அதனால் என்னுடைய  பாஸ்போர்ட் சைஸ்  போட்டோக்களை கொடுத்து வந்துவிடுவேன். அப்பொழுது சினிமாவின் மீது அதிக ஆசையால் வடபழனியில் உள்ள  புதிய பூமி எனும் நடனப்பள்ளியில் நடனம் கற்றுகொண்டேன்

ஆன்ட்ராய்டு திறன் பேசியில் இருக்கவேண்டிய பயனுள்ள செயலிகள் !

Image
ஆன்ட்ராய்டு திறன் பேசியில் அளவுக்கு அதிகமான செயலிகளை அடைத்து வைத்திருப்பர். அவற்றில் அவசியமான செயலிகள் எவையெவை என்பதை காண்போம். இன்றைய இளைஞர்கள் பொழுதுபோக்கு மற்றும் சமதாயத்திற்கு உதவாத, நேரத்தை தின்று தீர்க்கும் செயலிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதிகளவு நேரத்தை அதனை பயன்படுத்துவதன் மூலம் விரயமாக்குகின்றனர். அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு "ஸ்மார்போன்" பயனரும் தங்களுடைய திறன்பேசியில் வைத்திருக்க வேண்டிய அவசியமான செயலிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். Google Translate – ஆங்கிலம் புரியவில்லையா இதோ உங்களுக்கான செயலி Naukri - வேலை தேடுவோருக்கான செயலி Redbus - பேருந்து முன்பதிவிற்கான செயலி Mintly - சிறந்த முழுநேர மற்றும் பகுதிநேர வேலை தேடுவோருக்கான செயலி IRCTC - ரயில் முன்பதிவிற்கான செயலி Applock - இது உங்களின் அனுமதி இல்லாமல் மற்றோர் உங்கள் போனை பயன்படுத்துவதை தடுக்கிறது. இது ஆப் களை மட்டும் லாக் செய்ய பயன்படுகிறது Daily Hunt - செய்திகளை எளிதில் தெரிந்து கொள்ளலாம் UC Browser -ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து செய்திகள் கொண்ட செயலி True Caller - நமக்கு வந்த அழைப்புகள் யாரிடமிருந்

சாப்ட்வேர் என்றால் என்ன? அதன் பயன் என்ன?

Image
மென்பொருள் என்றால் என்ன? இது என்ன செய்யும்? பல பயனுள்ள வேலைகளை கணினியின் மூலம் செய்துகொள்ள பயன்படும் ஒரு நிரல்பொதி அல்லது நிரல்களின் தொகுப்புதான் மென்பொருள். மென்பொருள்கள் சரியாகச் சொல்வதென்றால் மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த வேலைகளனைத்தையும் கம்ப்யூட்டர் உதவியுடன் செய்து ஒரு சில வினாடிகளில் முடித்துக் கொடுப்பவைகள்தான் மென்பொருள். ஆங்கிலத்தில் கூறுவதெனில் "Set of Instructions called programs responsible for running computer is called Software.Software makes Hardware to run." அவ்வளவுதான். கணக்குகள் போட,  தகவல்களை திரட்டி வைத்துக்கொள்ள(To gather information),  திரட்டிய தகவல்களை தேவைப்படும்போது எடுத்துக் கையாள (), இயந்திரங்களை பணி செய்ய வைக்க..  இப்படி எண்ணற்ற செயல்களைச் செய்திட பயன்படுகின்றன. ஏறக்குறைய மனிதன் செய்த வேலைகளனைத்தையும், முழுமையாகவோ, அல்லது பகுதியாகவே செய்வதற்கு கணினிகள் பயன்படுகின்றன. கணினி/கம்ப்யூட்டர் அது சார்ந்த உபகரணங்களைச் செயல்படுத்த பயன்படும் நிரல்வரிகளால் உருவாக்கப்பட்ட நிரல் பொதி (தொகுப்பு) மென்பொருளாகும். மென்பொருளுக்கு மதிப்பு அதிகம். ஏன்?

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு வழக்காடல் துறையில் வேலை வேண்டுமா?

தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 15 பணியிடம்: சென்னை, மதுரை தகுதி: விண்ணப்பத்தாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30க்கு மிகாமலும், பிசி, எம்எம்சி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு தலைமை வழக்குரைஞர்,  அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று