குழந்தைகள் வளர அவசிய தேவை சத்தான உணவுகள். அவற்றை தரம் பார்த்து சரியான முறையில் கொடுத்து வர, போதிய ஊட்டச்சத்துப் பெற்று நோய் நொடிகள் இன்றி விரைவில் வளருவர். சிறு வயது முதல் போதுமான சத்தான உணவுகளை உண்டு வரும் குழந்தைகள் வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இன்றி, ஆரோக்யமாக வளருவர். படிப்பில் சுட்டியாக திகழுவர். உங்கள் குழந்தைகளும் சுட்டியாக, ஆரோக்கியமாக இருக்க என்னென்ன அடிப்படை உணவுகள் கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முட்டை, பால், மாமிசம், முழுதானிய உணவுகள், சிக்கன், சோயா பீன்ஸ், காற்கறிகள், பழங்கள், மற்றும் நீர். முட்டை: இதில் அதிக புரத ச்த்து உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது. சிறு வயது முதல் தினம் ஒரு முட்டை கொடுத்து வர குழந்தைகள் எந்த ஒரு குறைபாடின்று வளருவர். இதை பொறியல் செய்து கொடுப்பதைவிட நீரில் வேக வைத்து அவித்து கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதுவே நல்லது. இது செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. எனவே பெற்றோர்கள் தவறாமல் பிள்ளைகளுக்கு ஒரு முட்டை கொடுத்து வளர்க்கவும். முழு தானியங்கள் - உணவுகள்: க...
மால்வேர் பிரச்னைகளை சமாளிக்கும் வழிமுறைகள்: (Solving methods of Mal-ware problems) வைரஸ்சை கூட ஒரு விதத்தில் நல்லவன்னு சொல்லலாங்க.. இந்த மால்வேர் இருக்கே..! கூட இருந்தே குழி பறிக்கும் நண்பன் மாதிரி.. உங்கள் கணினியில் இருந்துக்கொண்டே, நீங்கள் என்னென்ன தகவல்கள் உள்ளிடுகிறீர்கள்.. என்னென்ன பாஸ்வேர்ட் வச்சிருக்கீங்க.. எந்தெந்த தளத்தில போய் வேலை செய்திருக்கிறீர்கள்ன்னு... எல்லாத் தகவல்களையும் நமக்கே தெரியாம திரட்டிக்கொண்டு, சாதுவாக தன்னை அனுப்பின எனஜமானனுக்கு இந்த தகவல்களையெல்லாம் அனுப்பி வச்சிட்டே இருக்கும். டெரெய்ட் பார்வர்ட் டைப் இது.. வேற எதையும் யோசிக்காது. அனுப்பினவங்க என்னென்ன கட்டளைகள் கொடுத்திருக்காங்களோ அதை அப்படியே அச்சரம் பிசகாம செய்து முடித்துவிட்டு, உலகத்தில் ஒன்றுமே நடக்காத மாதிரி சாதுவாகிடும்.. இதுதான் மால்வேருடைய (Malware) பண்பு. ஏதாவது புதுசா ஒரு ஆன்ட்டி வைரஸ் புரோகிராமை இன்ஸ்டால் பண்ணனும் நாம் நினைச்சாக்கூட சைலண்டா அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுகிட்டே இருக்கும். ஏற்கனவே இருக்கிற anti virus புரோகிராமைக் கூட இது அப்டேட் பண்ண விடாதுன்னா பார்த்துங்களேன்..!! இந்த நிலைமையில இருக்...
Text to Audio Converter for Language Tamil வணக்கம் அன்பு நெஞ்சங்களே..! வலைப்பக்கம் வந்து நாட்கள் பல ஆகிவிட்டது. இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியில் எதுவும் சாத்தியமே..! அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போவது ஒரு அருமையான தளத்தைப் பற்றி. அதில் உள்ள ஒரு பயன்மிக்க மென்பொருளைப் பற்றியதுதான் இந்த பதிவு. ஆம். நண்பர்களே.. நாம் ஆங்கிலத்தில் எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம். அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். தமிழில் எழுதியதை வாசித்துக்காட்ட இங்கு கிளிக் செய்யவும் மேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும். தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள...
Comments
Post a Comment